Saturday 28 July 2012

அலங்காரமா? இல்லை அலங்கோலமா?

அலங்காரமா? இல்லை அலங்கோலமா?
இளங்கன்னியே! நின்று பதில் சொல்லம்மா!
அலைபோன்ற கருங்கூந்தல் சிவப்பானதும் - எண்ணெய்
அறியாது நார்போல விறைப்பானதும்
மலைபோன்று உயர்ந்தோங்கிக் கூடானதும் - பேன்
மகிழ்வோடு வாழ்கின்ற வீடானதும்
கண்ணாடிச் சருகேஉன் உடையானதும் - தொடை
காண்கின்ற நிலையாக மேல்போனதும்
முன்னாடி திறப்பேஉன் எழிலானதும் - வயிறு
மூடாது கீழ்நோக்கி அணியானதும்
கண்டோர்கள் நகைக்கின்ற உருவானதும் - வளர்
கயமைக்கே உரமூட்டும் பொருளானதும்
தண்டமிழ் நெஞ்சுக்கே தணலானதும் - அது
தருகின்ற வசைப்பாட்டின் கருவானதும்

மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் - (பாடல் வரிகள்)

கலைஞருக்கெல்லாம் உதவிடும் கலைநிதியே - என்றும்
நிலையாக நீவீர் வாழியவே...
                                                                                            - கலைஞருக்கெல்லாம்
அலைகடல் அவரின் அன்புள்ளமே - இந்த
அவணியில் என்றென்றும் வாழியவே!
                                                                                             - கலைஞருக்கெல்லாம்
ரத்னவள்ளி அம்மையின் கொடைநெஞ்சமே
ராகத்தில் பேதமில்லா இசை உள்ளமே..
மலேசியத் திருநாட்டில் சுடர்விடும் ரத்னமே..
முத்தமிழ் கலை வளர்க்கும்  அம்மா நீ வாழ்கவே
                                                                                               - கலைஞருக்கெல்லாம்
நாடிவரும் அன்பருக்கு உதவிடும் தாய்மடியே
தேடிச்சென்று கரம்நீட்டும் மனிதநேய மாமணியே..
கூடிவரும் நன்மையெல்லாம் கோடியாய் மாறுமே..
குவலயத்தின் புகழ் யாவும் உனைசேரும் வாழ்கவே
                                                                                                 - கலைஞருக்கெல்லாம்


Friday 27 July 2012

கோலங்கள் கனவுக்கோலங்கள் - பாடல்


எனது கனவுக்கோலங்கள் நாவலுக்காக பிரத்தியேகமாக நான் எழுதி நூல் வெளியீட்டின்போது நடனத்துடன் அரங்கேற்றிய பாடல்.
இசை : முரசு இளவரசு
பாடியவர் : ரகுராமன், சகீலா

வாழ்வளிக்கும் மரமே - பாடல்


எனது கனவுக்கோலங்கள் நாவலுக்காக நான் புனைந்த பாடல். நாவலில் இடம்பெற்றுள்ளது.  இசை : முரசு இளவரசு, பாடியவர் : ரகுராமன்

Thursday 26 July 2012

அமுதே தமிழே போற்றுகிறோம் - பாடல்

தமிழ்வாழ்த்து
இசை : முரசு நெடுமாறன்
பாடியவர் : ரகுராமன்

மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் - பாடல்


2011'ஆம் ஆண்டில் கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் 15'ஆம் அண்டு விழாவின் இலக்கியச்சோலை -10 நிகழ்ச்சிக்கு மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் தலைமை ஏற்றார். அவருக்காகவே நான் எழுதிய பாடல். இசை : முரசு இளவரசு, பாடியவர் : எம். துருவன்.

கோ.புண்ணியவான் அவர்களின் வாழ்த்து

 பல காலமாக இந்தச் சிறிய கவிதையைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.  வெகு தூரத்தில் இருந்தாலும் என்னைப்பற்றி நன்கு அறிந்து
என் பிறந்த நாளன்று மின்னஞ்சல் வழி அனுப்பினார்.  நாட்டின் மிக அற்புதமான படைப்பாளர்களில் ஒருவர். எனக்குப் பிடித்தவர்.

இனிய நண்பர்
   பாலகோபாலா
   பிறர் நலம் வாழும்
   பொதுநல குணவானே
   சமூகம் சிறக்க
   சிந்திக்க
   குறுந்தகவல் வழியும்
   மின்னஞ்சல் வழியும்
   தொலைபேசி வழியும்
   தகவல் பரப்பி
   தொண்டு செய்யும்
   கனவானே
   நீர் நலமே நீடு வாழ
   பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 
  கோ.புண்ணியவான்

கடந்து வந்த பாதையிலே... - 3

கடந்து வந்த பாதையிலே... - 3
 
'கவிச்சுடர்' காரைக்கிழார் சொல்கிறார்.., "தமிழன் எந்த மதத்தில் இருந்தாலும், அவன் தமிழன் என்ற நிலையில் தை முதல் நாளைத்தான் 'தமிழ்ப் புத்தாண்டாகக்' கொண்டாடவேண்டும், சித்திரை முதல் நாளல்ல; அப்படி சித்திரை முதல் நாளை 'தமிழ்ப் புத்தாண்டு' எனக் கொண்டாடும் சமுதாயத்தின் மீது காறித் துப்பவேண்டும், என்றுதான் திருந்துவதோ... தொன்றுதொட்டு வந்த மடமை. இது தொடர்கதையோ அன்றி துயர்க்கதையோ! இதில் யாருக்கும் வெட்கமில்லை. செம்மறியாட்டுக் கூட்டங்களைப்போல முன்னது குழியில் விழுந்தால், பின்னால் போகும் அத்தனையும் கண்ணை மூடிக் கொண்டு விழுகின்றனவே! அது செம்மறியாட்டுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால் மனிதனுக்குஇன்று நமக்குள்ளும் இதுதான் நடக்கின்றது...."   இப்படியாக,    'சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா!' என்ற நீண்டதொரு கட்டுரையை 10.4.2011 ஞாயிறு மலேசிய நண்பனில் எழுதி இருக்கிறார்நல்ல பல செய்திகளையும் சொல்லி இருக்கிறார்.(!!!???)  அவருக்கு நமது வாழ்த்துகள்.

சரிஇப்போது இந்தச் செய்திக்கு வருவோம். அது என்ன, உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுதமிழன் எந்த மதத்தினராக இருந்தாலும், அவன் தமிழ்ப் புத்தாண்டு என்று வரும்போது ஒற்றுமையுடன் ஒன்றாக தை முதல் நாளை கொண்டாட வேண்டும் என்றால், வெவ்வேறு மதத்தில் இருக்கும் அதே தமிழனுக்கு ஒரே மொழியாக இருக்கும் தமிழ் மொழிக்கு ஏன் இப்படி ஒரு மதச் சார்பிலான மாநாடு?

உலக இஸ்லாமியர்களின் மாநாடு என்பது சரி; ஏற்றுக் கொள்ளலாம்உலக கிருஸ்துவர்களின் மாநாடு என்பதும் சரி, உலக இந்துக்களின் அல்லது இந்து சமய மாநாடும் சரி; இவையெல்லாம் சமய அடிப்படையில் நடைபெறும் மாநாடுகள் என்ற ரீதியில் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு என்று சொல்வதுபோல், உலக இந்து தமிழ் இலக்கிய மாநாடு என்று இருக்கிறதாதமிழ் மொழிக்கு ஏன் மதச் சாயம்? அப்படியே ஒரு இந்து தமிழ் இலக்கிய மாநாடு என்று ஒன்று நடந்தால், ( நடக்கக் கூடாது, இனிமேலும் உருவாகக் கூடாது) இஸ்லாமியத் தமிழர்கள் அதில் இணைவார்களாஇங்கு முனைவர் குமரன், டாக்டர் சண்முக சிவா முதல் பல இலக்கியவாதிகளும் இந்த மாநாடு சம்பந்தமாக நடைபெற்ற ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் இருக்கிறார்கள்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு / செம்மொழி மாநாடு அல்லது உலகத் தமிழ் இலக்கிய மாநாடு எனப் பொதுவாக எல்லா மதத்தைச் சார்ந்த தமிழர்களும், தமிழறிந்த மற்ற இனத்தவர்களும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு மொழி சார்ந்த இலக்கிய மாநாட்டிற்குப் பதிலாக இப்படி தமிழ் மொழியும் மதத்தால் தனித் தனித் தீவாகப் பிளவுபட்டுப் போகும் அவலத்திற்கு மேதாவிகளும் கொண்டுவந்து விட்டார்களே.... இது பற்றி 'கவிச்சுடர்' காரைக்கிழார் என்ன சொல்லப் போகிறார்?

மலேசிய நண்பனில் வேலை செய்துகொண்டே அதே பத்திரிகையில் வீராவேசமாக அப்படி எழுதியும் அங்குள்ள பணிமனை ஊழியர்கள் கோலாகலமாக சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிய வேளையில், கேவலம் அவர்களையே தடுத்து நிறுத்தி (அங்குள்ள பலரும் தமிழ்ப் புத்தாண்டு என்றுதான் சொன்னார்கள்!!!???) புத்தி புகட்ட முடியாத கையாலாகாத்தனம் கொண்ட 'கவிச்சுடர்' இந்த மாநாடு பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருக்கிறேன். (விஷு புத்தாண்டை ஓணம் என்று வேறு எழுதி இருக்கிறார் - நண்பனில்).

சரி..., இந்த செய்தியெல்லாம் எப்படி அவருக்குச் சென்று சேரும் என்கிறீர்களா? அது நிச்சயம் சென்று சேரும், ஆளா இல்லை!    

தூது

தென்றலைத் தூதுவிட்டால்
அது திசைமாறிப் போய்விடலாம்
திங்களைத் தூதுவிட்டால்
அது தேய் பிறையில் மாய்ந்திடலாம்
அன்றிலைத் தூதுவிட்டால்
அது இணைதேடிப் போய்விடலாம்

மங்கையைத் தூதுவிட்டால்
அவள் மனம் மாறிப் போய்விடலாம்
மேகத்தைத் தூதுவிட்டால்
அது கலைந்தோடிப் போய்விடலாம்
ராகத்தைத் தூதுவிட்டால்
அது லயம் தேடிப் போய்விடலாம்

பாரினிலே யாருமில்லை
என் பாவையிடம் தூது செல்ல
யாரையுமே நம்பாமல்
என் இதயத்தையே தூது விட்டேன்.

கடந்து வந்த பாதையிலே... - 2

கடந்து வந்த பாதையிலே - 2

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தமிழர்களுக்கென்று கம்பீரமாக உயர்ந்து நிற்பது துன் சம்பந்தன் கட்டிடம் மட்டுமே! அதில், முன்னால் அமர்ந்திருப்பவர்களின் தலைகள் மறைக்காமல் மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சுமார் 300 பேர் சாய்ந்து அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் சிறப்பாக வடிவமைத்திருக்கிறது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம். அங்கேயே மற்றொரு சிறிய மண்டபமும் உண்டு; அது சுமார் 100 பேர் அமரக்கூடிய சாதாரண மண்டபம். இரண்டும் குளிர் சாதன வசதியுடையது.

கோலாலம்பூரில் இருப்பவர்களுக்கும் சரி, மற்ற ஊர்களிலிருந்து வருபவர்களுக்கும் சரி, குறிப்பாக தமிழர்களுக்கு அந்த டான்ஸ்ரி டத்தோ கே.ஆர்.சோமா அரங்கம்தான் தங்களின் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உகந்த இடமாக அமைந்துவிட்டது. அதற்கு மற்றொரு காரணம், இடத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் நேராக நல்ல மனம் படைத்த டான்ஸ்ரி டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களிடமோ அல்லது மற்றொரு நல்ல மனிதரான டத்தோ சகாதேவன் அவர்களிடமோ சென்று எப்படியாவது அந்த மண்டபத்தை வாடகை இல்லாமல் பெற்றுக்கொள்வார்கள். சில நேரங்களில் குறைந்த வாடகை கொடுத்துப் பெற்றுக் கொள்வார்கள். இந்த நல்ல காரியத்தை அந்த நிருவாகம் பல வருடங்களாகச் செய்து வருகிறது. அவர்களுக்கு நம் இந்திய சமுதாயம் குறிப்பாக நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் இதர பல நிகழ்ச்சிகள் நடத்திவரும் தனியார் மற்றும் இயக்கங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளது.

அண்மையில் 11.6.2011 சனிக்கிழமை ஜொகூர், மாசாய், ஸ்ரி ஆலமைச் சேர்ந்த க.கோபால் அவர்களின் நூல் வெளியீடு சோமா அரங்கில் நடைபெற்றது. ஜொகூர் பிரமுகர், கொடை நெஞ்சர் டாக்டர் புருஷோத்தமன் அவர்களின் தலைமையில் கவிஞர் ப.ராமுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுமார் 20 - 25 பேர் மட்டுமே வந்ததாக கோலாலம்பூர் சிலாங்கூர் எழுத்தாளர் வாசகர் இயக்கத் தலைவர் அம்பாங் சுப்ரா சொல்லி வருத்தப் பட்டார். அவர் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டாராம்.

பொதுவாக, அவர் அப்படிச் செயல்பட்டால் 100 முதல் 150 ரிங்கிட்வரை கிடைக்குமாம். இந்த வெளியீட்டு விழாவில் முதலுக்கே மோசம் என்பதால் தனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்று விசனப்பட்டுக் கொண்டார். அதோடு இந்த விழாவை ஏற்பாடு செய்வதன்வழி தனக்கும் ஏதாவது கிடைக்கும் என்ற நிலையில் இருந்த ப.ராமுவுக்கு பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், சுமார் 35 - 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் கிள்ளானிலிருந்து கோலாலம்பூர் சென்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் அதோடு தமிழ் வாழ்த்துப்பாட யாரும் வந்திருக்காவிட்டால் அதையும் பாடி கலகலப்பாக வழி நடத்துவதற்காகவே ஐம்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தயார் நிலையில் வந்து நடத்திக் கொடுத்த எனக்கு யாரும் ஒரு ரிங்கிட் கூட தந்ததில்லையே! நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் நான் கேட்பதில்லை, அது என் குணம், அவர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டுமே! கார் என்ன தண்ணீரிலா ஓடுகிறது! கொடுத்து வைத்தவர் அம்பாங் சுப்ரா; உங்களுக்கு எங்கோ மச்சம் இருக்கிறது ஐயா! இனியும் நான் சும்மா இருக்கக் கூடாது, இப்பொழுது பணி ஓய்வு பெற்றுவிட்டதால் யார் அழைத்தாலும், "எனக்கும் ஏதாவது ஹீ.. ஹீ.. ஹீ.. பார்த்துக் கொடுங்க சார்ர்ர்.. ஹே.. ஹே.. ஹே.." என்று சூடு சொரணை இல்லாமல் இளித்துக்கொண்டு தலையை சொரிந்து கொள்ளவேண்டும். அப்படி உள்ளவர்களுக்குத்தான் இது காலம். காலமடி காலம் கலிகாலமடி காலம்.

அடுத்து, இங்கு அடிக்கடி மற்றவர்களின் நூல் வெளியீடுகளுக்குச் சென்று வாங்கி ஆதரிக்கும் நல்லுள்ளம் கொண்ட பல எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளுக்கே கூவிக் கூவி அழைத்தாலும் வர மறுக்கிறார்களே! 'அவர் என்னுடைய பல நூல் வெளியீடுகளுக்கு வந்தவர், இவருடைய முதல் வெளியீட்டிற்கு நாம் நிச்சயம் செல்லவேண்டும் அல்லது குறைந்த பட்சம் எங்கேணும் பார்த்தாவது பெற்றுக் கொள்ளவேண்டும், அல்லது நூலை அனுப்பி வைக்கவும், வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டுவிடுகிறேன்' என்ற அக்கரை கொஞ்சமாவது இருக்க வேண்டுமல்லவா இந்த மாபெரும்(?) 'அன்பு' எழுத்தாளர்களுக்கு!!!

இப்படி இருக்க, பொதுவாகவே இந்த வட்டாரத்தில் நடைபெறும் நூல் வெளியீடுகளுக்கு வராத க.கோபால் எந்த தைரியத்தில், யாருடைய சொல் கேட்டு இங்கு வந்து நூல் வெளியீடு செய்தார் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

கடந்து வந்த பாதையிலே... - 3 தொடரும்

கடந்து வந்த பாதை... - 1

அந்தக் காலங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் திறனாய்வுகளில் மூவரின் சிறுகதைகள் திறனாய்வாளரால் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றை வந்திருப்பவர்களில் மூவரிடம் வாசிக்கச் சொல்லி எல்லோரும் செவிமடுப்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ' நான் வாசிக்கிறேன்' என்று முந்திரிக்கொட்டை போல் கேட்டு வாசிப்பவர்களில் பலர், 'எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்' என்பதுபோல நல்ல சிறுகதையைக்கூட கெடுத்து குட்டிச் சுவராக்கும் கலையில் வல்லவராக இருப்பார்கள்.

அந்த நிலை இங்கு இருக்கக்கூடாது என்பதற்காகவே ஏற்பாட்டாளர்கள் மூவரை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். அந்த மூவரில் நானும் ஒருவன். இன்று சிங்கையின் பாலு மணிமாறன் அன்று மலேசியாவில் காப்பார் பட்டணத்தில் பொறியியலாளராக வேலை செய்துகொண்டே எழுத்துத் துறையிலும் தீவிரமாக இருந்தார். இங்கு அவர், 'அப்பாவிச் சோழன்' என்ற பெயரில் நிறைய சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தார். அவருடைய சிறுகதையும், எழுத்தாளர் சைபீர் முகம்மது அவர்களில் சிறுகதையும் மற்றும் நினைவில் இல்லாத வேறொரு எழுத்தாளரின் சிறுகதையும் இறுதி சுற்றுக்குத் தேர்வு பெற்றன. அப்பாவிச் சோழனின் சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எனக்கு ஒலிபெருக்கிமுன் பேசும்போது நா' சற்று வரண்டுபோகும், அதை என் நண்பர் 'ஏடம்' நன்கு அறிந்து வைத்திருக்கிறார். அப்பாவிச் சோழனின் சிறுகதையை மிகவும் அழகாக வாசித்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து எனது ந' வரண்டுபோய்க் கொண்டிருந்ததை 'ஏடம்' பார்த்துவிட்டுச் சரியான நேரத்தில் ஒரு 'கிளாஸ்' தண்ணீரை 'ரோஸ்ட்ரம்' மீது கொண்டுவந்து வைத்தார். அந்தச் சமயம் பார்த்து நானும் அப்பாவிச் சோழனின் சிறுகதையில் வரும் ஒரு கதாபாத்திரம் "கோப்பையில் உள்ள மதுவைக் குடித்தார்" என்று இருந்ததை வாசித்துவிட்டு,  "நானும் குடித்தேன்" என்று நண்பர் 'ஏடம்' எனக்காக வைத்துச் சென்ற அந்த தண்ணீரை எடுத்துக் குடித்தேன். இதைக் கண்ணுற்ற அண்ணன் ஆதி குமணன், 'சபாஷ்' என்று பாராட்ட, வந்திருந்தோர் சிரிக்க ஒரே அல்லோல கல்லோலமாகிவிட்டது.
 

மூவரின் சிறுகதைகளும் வாசிக்கப் பட்டபின், கதைகள் மீதான விவாதங்கள், விமர்சனங்கள் என இறுதியில் எந்தச் சிறுகதை முதல் பரிசுக்குரியது என தீர்மாணிக்கப் பட்டது.  இதில் சை பீரின் சிறுகதை பற்றி விமர்சித்த கவிஞர் மறைந்த 'சாவி கலைச் செல்வன்' சரியாக விமர்சிக்கவில்லையென்று வரிந்து கட்டிக்கொண்டு பேசினார் சைபீர். "என்ன விமர்சனம் செய்கிறீர்கள், மண்ணாங்கட்டி விமர்சனம், மூளை இருக்கா?" என கூட்டத்தினர் முன் ஒருவரை பேசக்கூடாத வகையில் திட்டித் தீர்த்தார். கவிஞர் சாவி கலைச்செல்வன் கூனிக்குறுகி மௌனமானார். கூட்டத்தில் சிலர் முணுமுணுத்தனர்.

இல்லம் வந்த நான் உடனே மரியாதைக்குரிய சை பீர் அவர்களுக்கு கடுமையான ஒரு கடிதம் எழுதி நேராக அவர் இல்லத் தொலை நகலுக்கு அனுப்பி வைத்தேன்.

முறைப்படி என்னை அழைத்துக் கேட்க வேண்டியதை விட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்த முக்கியமான பலரிடம், " நான் என்ன பேசினேன்? அப்படியா முறைகேடாக பேசினேன்?" என்றெல்லாம் கேட்டு அவருக்கும் எனக்கும் மட்டும் உள்ள தொலை நகல் வழி அனுப்பப் பட்டக் கடிதத் தொடர்பை ஊருக்கே தெரிய வைத்து விட்டார். கடைசிவரை அதுதொட்டு அவர் என்னை அழைத்துக் கேட்கவே இல்லை. இதனால் எனக்குப் பலர் அழைத்து வாழ்த்துச் சொல்லி என் துணிச்சலைப் பாராட்டினர். அப்படி இருந்தாலும், சை பீர் அவர்கள் என்னை பார்க்கும் சமயம் முறைத்துக் கொண்டதில்லை. அது அவருடைய முதிர்ச்சியைக் காட்டியது. நன்றி ஐயா!

யார் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும், யார் யாரை வேண்டுமானாலும் ஏசட்டும், தூற்றட்டும், ஆனால் அவற்றில் அசிங்கத்தனமான வார்த்தைகள் இல்லாத வண்ணம் இருத்தல் அவசியம் என்று எழுத்தாள வாசக நண்பர்களுக்கு நான் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்றில்லை.

மீண்டும் கடந்து வந்த பாதை - 2 வழி சந்திக்கிறேன்.

கடல்

நீலக்கடலே! ஆழக்கடலே!
நினைத்துப் பார்த்தால் என்ன விந்தையோ
ஆழி உன்னை ஆறுகள் வந்தடைய
அம்மா போல அரவணைக்கின்றாயே!

மலை முகடு பசுமையோடு
மனிதர் சேர்க்கும் அசிங்கத்தோடு
நல்ல நீரும் சிதிலமடைய
நாடிக் கலந்தது சாக்கடைகளும்

எத்தனை ஆறுகள், எத்தனை எத்தனை அடித்து வரும்
அத்தனை விதத்திலும் எத்தனை அழுக்குகள்
முத்தமிட்டு அவை உன்மடியிலே சேர்ந்தாலும்
அத்தனை அழுக்கும் போவதும் எங்கே?
அவையும் தூய்மை ஆனதும் என்னே?

இருந்தாலும் உன்மடியிலே - என்ன மாயமோ...
இருக்கும் நீரெல்லாம் தூய்மையாகுதே!
இருந்தும் நீந்தித் திளைத்திட்டாலே
இருக்கும் நோயெல்லாம் தீரும்தானே!

பூமியிலே மூன்று பாகம் சூழ்ந்தாயே
பூமிக்கு மேலே வானவெளியெங்கும்
பூசியது நீலவண்ணம் நீயே தானோ?
சொல்லாயோ நீலவண்ணக் கடலே!

பூமியிலே ஆயிரம் பேதங்கள் உண்டு
பொறுத்து யாரும் இணைவதும் குறைவு!
நாடுகள் ஆயிரம், ஆறுகள் ஆயிரம்
நிறம், மொழி, பண்பாடு எல்லாம் வேறுவிதம்!

நாடி ஆழி உனை அவை சேர்ந்தபோதும்
நித்திலமான நீலநிறம் ஒன்றே அதற்கு!
வேற்றுமையில் ஒற்றுமையை
எப்படி விளைவித்தாய் கடலே!

பூமிக்கு மேலே இருக்கும் உலகம்
பூமியில் உள்ளார் அறிந்த உலகம்
அலைக்கரம் வீசி வீசியே உன்னுள்ளே
அடக்கி வைத்திருக்கும் உலகம் விந்தையே!



மீன்கள் நீந்தும், முத்துக்கள் பிறக்கும்
மாநில மக்கள் மரக்கலம் ஏறியே
மண்ணுக்கு மண் உறவாட உதவும்
கடல் வழிச் சாலையும் நீயே!

கடலே உன் மடியிலே நீதான்
கொண்டிருக்கும் உலகம் தனி உலகமே!
சரித்திரம் கண்டுவரும் கடலும் நீயே!
நீலக்கடலே அறிவாயா நீயே?

அமைதிக்கு அடையாளம் அகன்ற கடலே
ஆழ்ந்த உணர்வுக்கு ஆழமும் நீயே
வாழும் மாந்தர்க்கு கடல் உணவையே
வாரித்தருவதில் பூமிக்கு நிகர் நீயே!

போனவன் போனான் பூமியிலே அடக்கம்
போனவன் புண்ணியத்திற்கு உன்னிடம் அடைக்கலம்
வானுலகம் சென்றவன் வாரிசுகள் உன்னிடம்
வந்துதான் சடங்கு செய்யும்... அதற்கென்ன!

எத்தனை செய்தான் என்ன செய்தானோ?
அத்தனையும் உன்னிடம் அஸ்தி கரைக்க
அத்தனை தீமையும் விட்டுப் போனதே
அப்படி நம்பியே போனவன் காரியம் உன்னிடம் நடக்குமே!

ஆடிப்பெருக்கால் அருவிகள் பாய
கடல் பெருக்குக் கொள்வாய் நீயே!
கூடிய தம்பதிகள் குறையாது வாழவே
சூடிய நாணை புதுக்கிப் போடவே
நீடிய வாழ்வுக்கு அடையாளம் நீயே!

நெடுங்கடல் பெண்ணே! நினைத்தால் வியப்பே!
பொறுமைக்கு பூமி என்பதும் உண்மையே
பொங்கும் கடலே! நீ பொங்கினால் கொடுமையே!
எனினும் பொங்காமல் பொறுமை காக்கின்றாயே!?..

அத்தனை நீரும் உப்பாய் இருக்கும்
அதற்கும் அர்த்தம் அருமையாய் இருக்கும்!
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும்
உன்னத அர்த்தம் அதற்கு உண்டே!
உப்புச் சேர்த்தால் பண்டம் உருக்குலையாதே
எப்படி இப்படி இத்தனை சிறப்புகள்?

எழுகின்ற அலைகளால் இன்னிசை முழங்கியே
இசைக்கும் இலக்கணம் தருகின்ற கடலே...
கடலே உன் நீர் கதிரவன் எடுப்பான்
கார்மேகமாய் கொண்டு சென்றே
கொட்டும் மழையால் கொட்டி வளம் சேர்ப்பான்!

இத்தனை செய்தாய் இத்தரை சூழ்ந்தாய்
அத்தனை சிறப்பையும் உன்னுள் அடக்கி - அமைதி காத்தாய்!
கடல் உன் ஆழம் காண்பதும் அறிதே!




***எய்ட்ஸ்***

"எந்தப் புற்றில் எந்தப் பாம்போ
 யாருக்குத்தான் தெரியும்?
 எந்த ஆணோ எந்தப் பெண்ணோ
 யார் அறிவார் நதிமூலம்?
 
 பெண்ணாசை ஆணாசை இயற்கை விதி
 பெறுவதிலே வேண்டும் நன்னெறி!
 விண்முட்டும் மோகத்தால் விழுவதா விதி?
 விதி மீறி விதி தவறியதற்கு இந்தக் கதி!
 
 மனமொன்றி மணம் புரிந்து வாழ்க்கையில்
 மேவுதலே கூடி முயங்குதல்!
 பிணமாகும் உடல்மீது இச்சைகொண்டு
 புணர்ந்தாலே வரும் நோய்க்கேடு!
 
 கூடி முயங்கவேண்டும் துணைவன் துணைவி
 கூடுவார் எல்லாரிடமும் கூடுதல் அநீதி!
 மூடியுள்ள உடலுக்குள்ளே குடியிருக்கும் கிருமி
 மனைவி, துணைவன், பிள்ளை என்று பரவுமேஅக் கிருமி!
 
 இந்த நோய் பற்றியவரை பற்றினால் பரவாது
 இழுக்கான முறைகேடு இருந்தால் விடாது!
 இந்த நோய் பற்றியவரை இழிவாக எண்ணாது
 இயன்ற உதவிகள் செய்தல் தவறாகாது!"
 

கோயிலா? கோவிலா?

கோயிலா? கோவிலா?
 
" 'கோ' எனும் நிலை மொழி 'ஒ' எனும் உயிர் ஒலிப்பு உள்ளது. 'இல்' எனும் வருமொழி உயிர் எழுத்தில் தொடங்குகிறது. எனவே, 'வ'கர உடம்படு மெய் எனும் இலக்கண விதிப்படி 'கோவில்' என எழுதவேண்டும். நாம் கோவிலை 'கோயில்' என்று தவறாக கூறி வருகிறோம், எழுதி வருகிறோம்" என்று கடந்த 27.4.2011 புதன்கிழமை மலேசிய நண்பன் பத்திரிகையின் 6-வது பக்கத்தில் பினாங்கு, பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் திரு. ஆர். காளிதாஸ் விளக்கம் தந்திருக்கிறார்.
 
இதுவரை, யாரும் தராத விளக்கம்(!?); நம் சிந்தனைக்கொரு விருந்தல்லவா!
இதைத்தொட்டு சற்று ஆராய முனைந்தேன்.
 
"இ, ஈ, ஐ வழி 'ய'வ்வும் ஏனை உயிர்வழி 'வ'வ்வும் 'ஏ' வரின் இவ்விருமையும்" - இது நன்னூல் சூத்திரம்.
 
இந்த விதிப்படி 'கோவில்' என்பது சரியே!
 
அதுமட்டுமல்ல, 'கோ' = அரசன், 'இல்' = வீடு = கோ+இல் = இரண்டும் சேர்ந்தால் அரசன்(இறைவன்) குடியிருக்கும் வீடு. அந்தவகையில், நாம் பொதுவாகவே 'கோயில்' என்று வழக்கப் படுத்திக்கொண்டோம்.
 
மேலே குறிப்பிட்ட நன்னூல் சூத்திரப்படி, "ஏனை உயிர்வழி 'வ'வ்வும் எனும் விதிப்படி 'வ்' எனும் உடம்படு மெய் தோன்றிப் புணர்ந்து 'கோவில்' என்றானது.
 
இப்படியும் விளக்கம் கொடுக்கலாம். பொதுவாக பத்திரிகைகளில் 'கோவில்' என்று ஊர் பெயர்களையும், உதாரணம் : 'கோவில்பட்டி'; 'கோயில்' என்று 'கோவில்'களையும் நாம் குறிப்பிடுகிறோம்.
 
நம் வாழ்க்கையில் நாம் வழக்கப் படுத்திக்கொண்ட பல வார்த்தைகள் தொல்காப்பியர் இலக்கணப்படி தவறு என்றாலும் அவற்றைத் தொடர்ந்து நாம் பயன்பாட்டில் கொண்டுள்ளோம்! ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக் கழகம்வரை பயன்பாட்டில் இருக்கும் பாட நூல்களிலும் இதுபோன்ற தவறுகள் மலிந்து கிடக்கின்றன; அவற்றை மாற்ற முடிந்தால் பலகாலமாக 'கோயில்' என்று நாம் எழுதிவரும் சொல்லையும் 'கோவில்' என்று மாற்றலாம். இலக்கணமாவது கத்தரிக்காயாவது என்று தமிழ்க் கல்விமாண்கள் நினைத்தால் பத்தொடு பதினொன்றாக 'கோயில்' என்றே புழக்கத்தில் இருந்துவிட்டுப் போகட்டும்!
 
எனவே, திரு. ஆர். காளிதாஸ் சொன்ன விளக்கம் சரியே! காரணம், இலக்கண மரபுப்படி 'கோவில்' என்பதே சரியான வார்த்தை.
 
அன்புடன்,
 
பாலகோபாலன் நம்பியார்
கிள்ளான்



பெண்


 பெண்
 
பெண் - உயிர்மெய்யும் மெய்யும் கலந்த
இரண்டு தமிழ் எழுத்து!
 
ஒற்றைக் கொம்பைப் போல்
ஒரு நாள் வளைத்து விடலாம்.
 
'ப' என்னும் பெட்டிக்குள்ளே
பாங்காய் அடைத்து விடலாம்.
 
நினைத்தான் ஒருவன் - மறு நாள்
மலைத்தான்!
 
'ண்'னில் உள்ள புள்ளி போல்
எட்ட நின்று...
அவள்
 
'ண' - வைச் சுற்றி சுற்றி
எழுதுதல் போலே அவனைச் சுற்றி
தலை கிறங்கச் செய்து -
சென்று விட்டாள்!
 
ஓ!... பெண் -
 
எத்தனை அர்த்தம் பொதிந்த
இயல்பான இன்தமிழ் எழுத்து!
 
பெண் - இரண்டு தமிழ் எழுத்து!




தாகம்

மண்ணின் தாகத்தை
மழைத்துளிகள் தீர்த்தன..
கண்ணின் தாகத்தை
காட்சிகள் தீர்த்து வைத்தன..

பெண்ணின் தாகத்தை
பழக்கமும் பரிவும் தீர்த்தன..
பண்ணின் தாகத்தை
பாடல் வரிகள் தீர்த்தன..

அழுத சிசுவின் தாகத்தை
அம்மாவின் அணைப்பு தீர்த்தன..
தமிழுக்குள்ள தாகத்தை
வாசிக்கும் ப்ழக்கம் தீர்த்தன

நட்புக்குரிய தாகத்தை
நெஞ்சப் பரிவுகள் தீர்த்தன..
தொட்டுத் தொடரும் பழக்கத்தை
தூய அன்புகள் நிறைத்தன..

தென்றலுக்கான தாகத்தை
தியங்கிய பனிகள் தீர்த்தன..
வண்ணமலர் தாகத்தை
வண்டுகள் வருடி தீர்த்தன..

செவ்விதழ்கள் தாகத்தை
சேரும் முத்தங்கள் தீர்த்தன..
செவ்வாயின் தாகத்தை
செந்தமிழ் சொற்கள் தீர்த்தன..

என்தாகம் எதுவென்று
யாருக்குத் தெரிகிறது?
என்தாகம் தீர்ப்பவரை
எங்கே சென்று தேடுவது?

Wednesday 25 July 2012

*கோலங்கள் கனவுக்கோலங்கள்... (பாடல் வரிகள்)

எனது 'கனவுக்கோலங்கள்' நாவல் வெளியீட்டிற்காக, அந்தக் கதையில் உள்ள கருவை இரத்தினச் சுருக்கமாக பாடல்வழி கொண்டுவந்தேன்.  பாடலை இசையமைக்கச் செய்து, நடனத்துடன் நூல் வெளியீட்டின்போது அரங்கேறியது.

                   பாடல்

கோலங்கள்... கனவுக் கோலங்கள்...
வாழ்க்கைப் பாதையின்
ஆறுகள் கடந்த பாலங்கள்
நடந்த காலங்கள்!

தோட்டமே கதியெனக் காட்டிய
பூட்டையே உடைபட நாட்டிலே
ஒருவழி சொல்லி அந்த சீர்வழி போனான்!
மாமணியான அந்த மணிவண்ணன் மேலோன்!

ஏழையும் வாழக் கோழையும் மீள
ஓடுமே பீடை எனும் படியாக..

வாழ்விலே ஒழுங்கினைப் போற்றினால்
ஓங்கலாம் எனும் ஒரு நீதியைக்
கூறியே பாதை காட்டும் ஓர் அரும் கோலமே!
சீர்தமிழ் ஓங்க வந்து பேர் சொல்லும் நூலிதே!

ஆருயிர் தோழர் வாழ்விலோர் சீலர்
நேர்வரும் கால நிறையொளியான..

தேசியத் தோட்ட
தொழிற்சங்க நடப்பை
செவ்வெனச் சொல்லிடும்
அரும்பெரும் நூலிதே!
பயிலுவோர் கனவெல்லாம்
நனவாகி ஓங்கவே
நேர்வழிச் சென்றிட
நல்வழிக் காட்டுதே!

கோலத் தமிழ்மொழி ஓங்க - நல்ல
நூல்களைப் படைத்திடல் வேண்டும்!
இலக்கிய நறுமணம் பரவ - நூல்
பல பல வெளிவரவேண்டும்!

வாசகர் கனவு பலித்திட - இறைவா
வருக! வருக! வந்தருள் புரிக!








*வாழ்வளிக்கும் மரமே...(பாடல் வரிகள்)

எனது 'கனவுக்கோலங்கள்' நாவலில் இடம்பெற்ற பாடல் வரிகள். இசையமைத்து, பாடலாகவும் கொண்டுவந்து நூல்வெளியீட்டின்போது நடனத்துடன் அரங்கேறியது. 
        
             பாடல்

வாழ்வளிக்கும் மரமே
வளம்மிகு சீருள்ள பால்மரமே
                                                                                    -  வாழ்வளிக்கும் மரமே...
காலையிலே எழுந்து - கருக்கலில்
பிரட்டுமே கலைந்து
வாளி உளிப்பட்டை
பையுடன் சேர்த்து
வாகுடனே நல்ல
காண்டாவில் கோர்த்து
                                                                                     
கீர்த்திமிகும் பால்மரமே - வெகு
நேர்த்தியான பால்மரமே
                                                                                      - வாழ்வளிக்கும் மரமே...
மங்கு துடைத்து வைத்து
வகையுடன் பீலிப்பால் தானெடுத்து
நெத்திக்கண் பக்கக்கண் நேராயிழுத்து
பக்குவமாய் காயம் பட்டிடாமலே

வெட்ட வந்தேன் பால்மரமே - இதோ
வந்துவிட்டேன் பால்மரமே
                                                                                         - வாழ்வளிக்கும் மரமே...
எத்தனை நாளைக்குத்தான்
இப்பாடு பட்டு வயிறு வளர்ப்பேன்
பண்டு என் தந்தை  படிக்கவைக்காமல்
பாவி என்வாழ்வை கெடுத்துவிட்டாரே

எந்தன் மனம் நோவதைவிட
வேறு என்ன செய்வேன் பால்மரமே
                                                                                         - வாழ்வளிக்கும் மரமே...

குறிப்பு
'நெத்திக்கண் பக்கக்கண்' என்பதை 'நெத்திக்கோடு பக்கக்கோடு'
 என்று சொல்வார்கள். பாடலைப்பாடும்போது சந்தம் சரியாக
வராததால் இசையமைப்பாளர் மாற்றினார்.                      
                                                                                                                                                                                    




திருவள்ளுவர் ஞானி

திருவள்ளுவர் ஞானி

உலக மாந்தர்க்கு ஒரு வழிகாட்டி - அவர்
உலக பொதுமறை தந்ததிரு வள்ளுவர் ஞானி

கலகம் இல்லாத வாழ்வுக்கு அறிவூட்டி - எந்த
காலத்தும் வாழ்வுக்கு கலங்கரை விளக்க ஒளிகாட்டி

அறம் பொருள் இன்பம் என்றே வகுத்தார் - அதனை
ஈரடியில் எழு சீரில் முடித்தார்
திறமாக அதிகாரம் நூற்று முப்பத்து மூன்று - அதில்
தடம் பார்த்து பயில குறள் பாக்கள் பத்து

அறத்துப்பால் அருந்தி அருள் நெறியோடு வாழ்க!
பொருட்பால் மாந்தி பொருளீட்டி வாழ்க!
இன்பத்துப்பாலே இல்லறமென்னும் நல்லற தர்மம்!
இணைந்த நெறிநின்று நடத்தல் பெரும் பேரின்பம்!

Tuesday 24 July 2012

பெரியார்

உடல் சிவப்பு;
உடை கறுப்பு;
உளம் வெளுப்பு;என-
உலாவந்த வாலறிவு நெருப்பு;
ஈரோட்டில் பூத்த - அந்த
ஈர நெருப்பு...
சமைத்துத் தந்தது-
சுய மரியாதையை

செந்தமிழே

நான் கற்ற செந்தமிழே 
நல்லின்பத் தேன்மொழியே!
நோன்பிருந்தேன் 
உன்னை நுகர்ந்துணர...
ஊண்மறந்து சந்தக்கவி பாட
முந்திவரும் என்னையினும்
நிந்திப்ப தேன்அன்னாய் நீ?

எவனடா யோக்கியன்?

ஆணும் பெண்ணும் கூடுதல் இயற்கை!
அன்பில் கலந்து வாழ்வதும் இயற்கை!
மானிடன் மட்டுமா? தாவரம் முதலாய்
உயிரினம் அனைத்திலும் உள்ளதோர் உணர்வு!

அவனவன் வேலையை அவனவன் பார்த்தால்
அடிதடி வம்புக்கு ஏதடா வாய்ப்பு?
அவனவன் முதுகில் ஆயிரம் அழுக்கு!
எவனடா யோக்கியன்? இருந்தால் விளக்கு!

சித்திரா பௌர்ணமி விழா

எண்ணி லடங்காக் காவடிகள்
எழிலாய் ஆட நான்பார்த்தேன்;
எரிச்ச லூட்டும் பித்தர்களின்
குரங்கு சேட்டையும் நான்பார்த்தேன்

பன்னீர் கொண்டே அபிஷேகம்
பாங்காய் நடக்க நான்பார்த்தேன்;
படுபாவிகள் செய்யும் சீர்கேட்டை
மனம் குமுற நான்பார்த்தேன்

கோலக்கிள்ளான் ஸ்ரீசுப்ரமண்யர் தனியழகை
சித்திரா பௌர்ணமியில் நான்பார்த்தேன்;
இந்துக்கள் பலர்செய்யும் அலங்கோலத்தை
அமைதியாய் அமர்ந்து அவன்பார்த்தான்!

மீண்டும் ஒருமுறை - புத்தாண்டு சிந்தனையாக.


மாட்டுக்கு வருவதில்லை மாரடைப்பு
அவை மாதாமாதம் போவதில்லை - சோதனைக்கு
காட்டெருமை சளிபிடித்து பார்த்ததில்லை
எவையும் கண்டபடி மருந்து வாங்கித் - திண்பதில்லை

கூட்டில்வாழ் பறவையிடம் குழப்பமில்லை
எவையும் குடித்துவிட்டு மரத்தடியில் - சாய்வதில்லை
நாட்டில்வாழ்  ஆறறிவைக் கண்டித்து
இங்கே நற்பண்பு காட்டுதையா - ஐந்தறிவு

மரத்தடியில் தன்கூட்டை விட்டுவிட்டு
கிளிகள் வாடகைக்கு சென்றெங்கும் - வாழ்வதில்லை
கற்பழிப்பும் கொலை திருட்டும் சூழ்ச்சிகளும்
சிங்கத்தின் குகைக்குள்ளே நடந்ததாக - படித்ததில்லை

மாறவேண்டும் மாற்றவேண்டும் - ஆறறிவு
இல்லையேல் சேர்க்காது நம்மினத்தை - ஐந்தறிவு!

ROTTEN TO THE CORE

After reading an article "What price a man" quite sometime ago in one of an Indian Magazine which emphasize the grisliness of dowry, I felt it apt to reproduce verbatim excerpts from a short story by I.Jayakaran long ago which epitomizes the evil of dowry - the immoral practice that dishonours womanhood...

"Tiwari's task of finding a groom was by no means an easy one. He was aware that Kajal combined beauty and intelligence in herself, but then, Bihari fathers don't go by looks. It's dowry that they are after; the greater the amount the greater is the girl's acceptability in the family. Looks never mattered! The going rate happened to be Rs 6 lakh (RM60,000) for a raw B.Tech or MBBS and at least 25% more if he was a working person. But, Tiwari's assets as on date were a mere Rs 1 and half lakh (RM15,000). Even if he sold off all his wife's jewellery, the total amount he had would not exceed Rs 3 and half lakh (RM35,000).

He shrugged and thought to himself that he would have to settle for some babu (young man) working in a municipal office or possibly some middle school teacher. Many beauty queens in Bihar had to marry ordinary men because their fathers could not afford to pay the high dowry demanded for better placed grooms"

Well, the practice of dowry is offensive, grovelling and rotten to the core. It affronts our intelligence, morality and womanhood and those endeavouring to satiate their personal avarice making dowry a condition have descended to the level of the common street beggar. We can label them as "rapacious mendicants" and "money grubbers".

And those families concurring with the principle of the degrading and obnoxious system are in fact making their daughters into saleable assets. How abominable! After checking the antecedents of a man, is he still worth the dowry given? What if he turns out not to be a man of character, decency and substance of impotent failing to give his spouse her conjugal dues.

Or if he turns out to be a chronic alcoholic who batters her black and blue or treats her like an odalisque with a male chauvinistic attitude that sex is to be enjoyed by man and endured by woman?

There are a lot of arrogant SOBs and MCPs who think their penis is plated with gold and with a hefty varathatchanai (Tamil word for dowry) make a gem of a husband.

What if he turns out to be a two timing philanderer like Hugh Grant caught with the like of Estella "Divine Brown" Thompson? What if the gem of a husband turns out to be another John Wayne Bobbit? Does the aggrieved spouse have to slice of his penis to prove that the SOB was a worthless buy?

Let me not mince my words. No man is worth a dime of the dowry given no matter what blood or prestigious position he holds in society. Dowry should not be the decisive factor when marriage alliances are arranged and it should not be confined to the circumscribed limit of caste.

A marriageable girl's worth as a bride should not be determined solely by the amount of dowry she brings.

It is all right for girls born on a carpet of dollars or wallowing in the lap of luxury and whose parents concord with the principle of dowry to offer blank cheques to prospective bridegrooms (yet there's a question mark on his characters and worthiness!?) but what about families with not-so-young daughters who are clutching to the fag-end of gentility at a starvation salary or families who have no inherited land or property of any kind and financially down at the ladder? Should their daughters be kept aside as unwanted goods? Should such an idiotic system be permitted to continue?

The degeneration of it hampers the growth and progress of the Indian community and all the shock-horror stories emanating from India as a consequence of dowry should arouse every Indian out of complacency into reformer's fury to extirpate it.

Like suttee and caste, dowry system should be made virtually obsolete. Do not permit it to be the bane of the Hindu society.

இந்தியர்கள் மலேசிய நாட்டின் பக்கா விசுவாசிகள்