Tuesday 24 July 2012

எவனடா யோக்கியன்?

ஆணும் பெண்ணும் கூடுதல் இயற்கை!
அன்பில் கலந்து வாழ்வதும் இயற்கை!
மானிடன் மட்டுமா? தாவரம் முதலாய்
உயிரினம் அனைத்திலும் உள்ளதோர் உணர்வு!

அவனவன் வேலையை அவனவன் பார்த்தால்
அடிதடி வம்புக்கு ஏதடா வாய்ப்பு?
அவனவன் முதுகில் ஆயிரம் அழுக்கு!
எவனடா யோக்கியன்? இருந்தால் விளக்கு!

No comments:

Post a Comment