Thursday 4 October 2012

சிறுகதை : "கலைத்தாயின் சீற்றம்"

இந்தக் கதை 26.8.2012  ஞாயிற்றுக்கிழமை நம் நாடு  பத்திரிகையில் பிரசுரமானது.

சிறுகதை : "கலைத்தாயின் சீற்றம்" 
                 படைப்பு : பாலகோபாலன் நம்பியார்

லைகளின் தாயாக இருக்கும் கலைவாணி மௌனமாக சிந்தனையில்
ஆழ்ந்திருந்தாள். அது அவளின் தனித்துவ உலகம். அங்கு கலைகுறித்த
எண்ணங்களே பரிமாறப்பட்டு வந்தன. இங்கு, உலகைப் படைக்கின்ற
தொழிலில் இருக்கும் பிரம்மனுக்கு வேலையே இல்லை! இது கலைத்தாய்
தனக்காக உருவாக்கிய உலகம். இங்கு கற்றவர்கள், கவிஞர்கள், புலவர்களின்
நினைவும் அவர்களின் வருகையும் மட்டுமே இருக்கும். அவளுக்கு
உதவியாக பல பெண்கள் இருந்தார்கள். அவர்கள் கலைவாணியின்
உத்தரவை செயல்படுத்துவார்கள். அவள் எப்போது மௌனம் கலைந்து
சிந்தனையிலிருந்து விலகிப் பேசுவாள் எனக் காத்திருந்தார்கள். ஆனால்,
கலைவாணியின் மௌனம் தொடர்ந்தது...

அந்நேரத்தில், அந்தக் கலையுலக வாயிலிலிருந்து ஒருபெண் வந்தாள்.
அவள் கலைவாணியின் அருகில் சென்று மிக மெதுவாய்ச் சொன்னாள்...
"தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரன், தேவியைச் சந்திக்க
வருகிறார்!"

நக்கீரன் போன்ற புலவர்களுக்கு கலைஉலகில் எப்போது வேண்டுமானாலும்
வருவதற்கு தேவி அனுமதி கொடுத்திருப்பது அந்தப் பெண்ணுக்குத்
தெரியும்என்றாலும், அவள் கலைதேவியின் திருமுகத்தைப் பார்த்தபடி
நின்றுகொண்டிருந்தாள்.

கலைதேவியின் இமைகள் படபடத்தனஅவள் மௌனமாக இருந்தாலும்,
இந்தப் பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறதென்று அவளுக்குத் தெரியும்
என்றாலும் சிலவேளைகளில் அதற்கு மாறான நிலையில் நடந்துகொள்வாள்.

"தேவி..." என்றாள்.

"ம்..."

"தங்களைக்காண தலைமைப் புலவர் நக்கீரர் வருகிறார்!"

"அப்படியா?.." கலைவாணியின் உதடுகள் பிரிந்தன"அவரை மிகுந்த
மாண்போடு அழைத்து வா, அவரோடு நிறைய பேசவேண்டும்."

அந்தப் பெண் யோசித்தாள், 'புலவரே கலைவாணியோடு பேசவேண்டும்
என்று வருகிறார்; ஆனால், அவரோடு கலைவாணிக்குப் பேச என்ன
இருக்கிறது?..  கலைவாணிதானே எல்லா கலைகளுக்கும் தாய்!'

'ஒருமுறை பிரம்மதேவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரம்மன்
சரஸ்வதியான கலைவாணியை நாற்பத்தியெட்டு உருவாய் பூமியில்
அவதரிக்கச் சபித்தார்.  அவ்வாறு அவதரித்தவர்களே சங்கப் புலவர்கள்.
அந்தச் சங்கப் புலவர்களில் ஒருவரே நக்கீரர்.  அவரோடு கலைவாணிக்கு
என்ன பேசவேண்டும்?'  அவளுக்கு ஒரே யோசனை!

சாமரங்கள் வீச, மங்கல வாத்தியங்கள் முழங்க, புலவர் நக்கீரரை அழைத்து
வந்தார்கள்.  உள்ளே வந்த நக்கீரர், கலைவாணியின் திருமுகச் செழிப்பைக்
கண்டு தமது இரு கரங்களையும் தலைமீது குவித்து வணங்கினார்.  பிறகு,
கலைவாணிக்கு நேரே பூமியில் விழுந்து வணங்கினார்.

ஒரு வினாடி கலைவாணி உள்ளத்தில் சலனம்...  'பிரம்மதேவர் சபித்து
நான் நாற்பத்தியெட்டு உருவங்களானபோது அவற்றில் ஒன்றாய் ஆனவர்
நக்கீரன்.  அவர் என்னை வணங்குவது நானே என்னை வணங்குவது
போலாகுமா?..  இல்லை... இல்லை.., செடியில் மலர் பூத்தாலும்
செடி வேறு, மலர் வேறு; ஒரு தாயின் வயிற்றிலிருந்து குழந்தை
பிறந்தாலும், இருவரின் இரத்தம் ஒன்றானாலும் தாய் வேறு குழந்தை
வேறு என்பது தத்துவம்..'  தனக்குத்தானே தெளிவுபெற்ற கலைவாணி,
"வாருங்கள் தலைமைப் புலவரே" என வரவேற்றாள்.

"கலைதேவியே... தங்களின் அருட்கடாட்சம் என்னை மிளிர வைக்கிறது."

கலைவாணி ஒரு வினாடி யோசித்தாள்.  'சற்றுமுன் தன்னைச் சலனப்-
-படுத்தியதை நக்கீரனிடம் பகர்ந்தால் என்ன?'

"நக்கீரரே!  பிரம்மதேவரின் சாபத்தால் அடியேன் நாற்பத்தியெட்டு
உருவங்களானதும் அவர்களே சங்கப் புலவர்கள் என்பதும் உமக்குத்
தெரியும்.  அப்படியானால் உமது நிலை என்னஎனது நிலை என்ன?"

"கலைகளின் நாயகியே, இதற்கு விடை உங்களுக்குத் தெரியும்.
ஆனால், பதிலை என் மூலமாகப் பெறப்பார்க்கிறீர்கள்அடியேன்
நக்கீரன் - நாற்பத்தியெட்டு உருவங்களில் ஒன்றுதான்.  ஆனால்,
ஒன்று நாற்பத்தியெட்டாக முடியாது தேவி!"

கலைவாணியின் முகத்தில் மகிழ்ச்சி.  "தெளிவு பெற்றேன்; நக்கீரன்
வார்த்தைகள் மூலம் தெளிவு பெற்றேன்.  அதுசரி, நீர் இங்கு வந்ததன்
நேக்கம்?"

"பூலோகத்தில் இருந்து வந்தாலும் பூலோகத்தின் நினைவாகவே
இருக்கிறேன். தமிழுக்காக, அதன் தரத்திற்காக மூல முதல்வர்
முக்கண்ணனோடு வாதாடினேன். ஆனால், இன்று பூலோகத்தில் ஆயிரம்
தமிழ்ச் சங்கங்களை அமைத்து தமிழை பணத்திற்காக விற்பனை
செய்கிறான் மனிதன்.  தரமில்லாத தமிழை தன் உறவினர், தன் சாதியினர்
படைத்ததற்காகப் பாராட்டுகிறான்மேலும், இணையத்தளம் வழி
உலாவரும் ஏடுகளிலும் முகநூல்களிலும் யாரையாவது சாடுவதற்கு தமிழ்
மொழியின் பயன்பாடு கொச்சையாக்கப்பட்டு வருகிறது.  தமிழின் நிலை 
கவலையாக இருக்கிறது தேவி..!"

"
ப்படியா? பிறகு!..."

"
தாயே இந்தத் தமிழ்ச் சங்கங்கள், மற்றும் ஆய்வியல்துறைகள்
எல்லாம் பெயரளவில்தான் இருக்கின்றன.  தமிழ்மொழியை சிறுகச்
சிறுக இடைநிலைப்பள்ளிகளிலும், அதற்குமேலும் தமிழை ஒரு
பாடமாக எடுத்துப் படிக்கவிரும்பும் மாணவர்களின் ஆர்வத்திற்குக்
குழிதோண்டும் பள்ளி முதல்வர்களின் கெடுபிடிகளுக்கும் மற்ற
பிரச்சனைகளுக்கும் உடனே அறிக்கைகள் மட்டும்விடும் மன்னர்களாகத்தான்
அவர்கள் இருக்கின்றனர்; அல்லது கூட்டம்போட்டுத் தீர்மானம் நிறைவேற்றி
பூரித்துக்கொள்வார்கள்!"

"இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லையே நக்கீரரே!..."

"இருக்கிறது தாயே!.. 
அறிக்கைகளும் தீர்மானங்களும் போட்டால்
போதுமா?  களமிறங்கி அவற்றை முறியடித்துத் தமிழை ஒரு கட்டாயப்
பாடமாகக் கொண்டுவரவேண்டாமா? அவர்கள் இருப்பது மலாய் தேசத்தில்
தாயே!  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆயிரத்திற்கும்
மேலாக இருந்த தமிழ்ப்பள்ளிகள் இன்று பாதிக்குமேல் குறைந்துவிட்டது
தாயே!  இப்படியே போனால், இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில்
அவை நூறோ இருநூறோ யானறியேன் அம்மா!  அதற்கு ஒரே தீர்வு
மலாய் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ்மொழி ஒரு
கட்டாயப்பாடமாகக் கொண்டுவரப்படவேண்டும் அல்லவா தாயே!  அப்படிக்
கொண்டுவந்தால்தானே பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இலக்கியம்
தொடரும்!...  அதன்பிறகு, எந்தப்பள்ளி முதல்வராவது, எந்தக்
கொம்பனாவது வாய் திறப்பானா தாயே?

அதனால்தான் சொன்னேன்,
அறிக்கை விடுபவர்களும் தீர்மானம்
போடுபவர்களும் நமக்கெதற்குதாயேதங்களைப்போன்ற ஒரு
அம்மாவும் என்னைப்போன்ற ஒரு திடம்மிக்க தைரியசாலியும்
இணைந்தால் இந்தக் கோரிக்கையை எப்படியாவது நிறைவேற்ற
இயலும் அல்லவா தாயே!"
 

"ஹஹ்..ஹஹ்..ஹா.. நல்ல நகைச்சுவை நக்கீரரே!..
கடைசியில் நாம் இருவரும் பூலோகம் செல்லவேண்டுமோ?"


அப்படியல்ல தாயே,  தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.
தமிழுணர்வுடன்கூடிய செயல்திறன்மிக்கவர்கள் சிலரும் அங்கு
இருக்கின்றனர்.  ஆனால், அவர்கள் செய்யும் கடமையையும்
தடுக்க அங்கு ஒருகூட்டம் இருக்கிறது தமிழுக்குத் தமிழனே
எதிரியாக இருப்பதுதான் பெரும் வருத்தமாக இருக்கிறது தாயே!"
என்று நீண்டதொரு பிரசங்கம் செய்து முடித்தார் நக்கீரர்.

"
பூலோக மனிதர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்.
அவர்களுக்குள்ளேயே தேவர்
, அசுரன் எனப் பலரும் இருக்கின்றனர்.
ஆனால்
, அசுர குணமே அவ்வப்போது மேலோங்கும் நக்கீரா!"
"அசுர குணத்தை வைத்து தமிழோடு விளையாட வேண்டுமா தேவி?
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடவேறு பணம் கேட்கிறான் மனிதன்
!"
"அப்படியா? நம்பமுடியவில்லை நக்கீரரே! அவ்வளவு மோசமானவனாகி
விட்டானா மனிதன்
!" கலைவாணி கவலையுடன் வினவினாள்.
"நான் மிகைப்படுத்தவில்லை தேவி. உண்மையைச் சொல்கிறேன்,"
என்ற நக்கீரர் தன் கையோடு கொண்டுவந்த கையடக்கக் காணொளிப்
பதிவு மின் விசையைத் தட்டி ஓட விட்டார்
. கலைவாணியின் கண்களின்
முன்னே காட்சி விரிந்தது
...
              
***         ***         ***
ரு சிறிய மண்டபம்.  பிரதான மேடையில் சில நாற்காலிகள்
பிரமுகர்கள் அமர்வதற்காகக் காத்திருந்தன
.  மேடைச்சுவரில்,'தமிழ்க்கலை
முன்னேற்றக் கழகம்
' என்ற பெயருடன் ஒரு பதாகை தொங்கியது.
மண்டபத்தில் நூற்றுக்கும் சற்றுக் குறைவானோர் இருந்தார்கள்
.  ஐந்து
மணிக்குத் தொடங்கவேண்டிய இலக்கிய நிகழ்ச்சி ஆறு மணியாகியும்
தொடங்கவில்லை
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மணியம் கற்சிலைபோல்
நின்றுகொண்டிருந்தார்
!

நிகழ்ச்சி நெறியாளர் இராஜன் அங்கும் இங்கும் நடந்து தவித்தார்
.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடுபவரைக் காணவில்லை
.  ஐந்து மணிக்கே
வருவதாகச் சொன்னார்
.  கைத்தொலைப்பேசியில் தொடர்புகொண்டபோது,
'
உடல்நலம்  குன்றியிருக்கிறேன், வர இயலாது' என்று சற்றும்
கவலையில்லாமல் சொல்லிவிட்டுப் பேச்சைத் துண்டித்திருக்கிறார்போலும்
,
மண்டைக்கு மணியடித்தாற்போல் காட்சி தந்தார்
'இதை இவன்
முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே
; நான் அழைத்துக் கேட்டபிறகுதான்
சொல்லணுமா
! பாவிப்பயல், கடைசி நேரத்திலே காலைவாரிட்டானே!
இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட பொறுப்பு இல்லையே
' என்று
மனதிற்குள் புழுங்கினார்
.

மணியத்திடம் சென்று
, "அண்ணே, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடயிருந்த
ராகவன் வரல
, உடம்பு சரியில்லையாம், என்ன செய்யலாம்?" என்று
கேட்டார்
.
"இராஜன்.., நானே நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்பவரைக் காணோம்னு
தவிக்கிறேன்
. நீங்கவேறு, குண்டைத் தூக்கிப் போடுறீங்க! தமிழ்த்தாய்
வாழ்த்தை கூட்டத்தில் வந்திருப்பவர்களில் எவரையாவது கேட்டுப்பாடச்
சொல்லப்பா
" என்றவர் கூட்டத்தினரை ஒரு தரம் பார்த்துவிட்டு, "அட,
நம்ம பாடகர் மோகனைக் கேட்கலாமே
!" என்றார்.

இராஜன், உடனே பின்வரிசையில் அமர்ந்து யாருடனோ உரையாடிக்
கொண்டிருந்த பாடகர் மோகனை அழைத்து,
"தயவுசெய்து தமிழ்த்தாய்
வாழ்த்துப் பாடுறீங்களா
? இன்றைக்குப் பாடவேண்டியவர் வரல" என்றார்."இதுதான் வழக்கமா நடக்கிற விசயமாச்சே, தமிழ்த்தாய் வாழ்த்துபாட
யாரையாவது கடைசி நேரத்துலே அழைப்பீங்க
! முறையா யாரையும்
தயார் நிலையிலே வச்சிருக்க மாட்டீங்க
, அப்படியே வச்சிருந்தாலும்
அவங்களுக்கு கொடுக்கவேண்டியதைக் கொடுக்க மாட்டீங்க
..." என்று
எல்லாம் தெரிந்த நல்லையன்போல் வழவழத்தார் பாடகர் மோகன்
.

பிறகு இராஜனின் காதில் மெதுவாகச் சொன்னார்
, "தமிழ்த்தாய் வாழ்த்து
பாடலாமே
ஆனால் இலவசமாக முடியாது!  சன்மானம் தந்தால் பாடுறேன்"

இராஜன் அதிர்ச்சியடைந்தான்
!...  'தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட பணமா?"
              
***         ***         ***
க்கீரர் அந்த இடத்தில் கையடக்கக் காணொளியின் விசையை நிறுத்தினார்.
கலைவாணியைப் பார்த்தார்
.

இது குறித்து கலைவாணி வருந்தினாள்
! 'தன்னை வாழ்த்த மானிடன் பணம்
கேட்கிறானே
! தொல்காப்பியர் காலம்தொட்டு தொடர் சங்கக் காலத்திலும்
அதனையடுத்த பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை என்னைப் பாடுவதற்கென்று
யாரும் பாடல் புனைந்து நிகழ்ச்சி தொடங்குவதற்குமுன் பாடவில்லை
!
இடையில் மனிதனே ஒன்றை உருவாக்கி செயல்படுத்திப் பாடுகிறானே என்று
அகமகிழ்ந்தேன்
. சுப்பிரமணிய பாரதி உட்பட பலரும் பலவிதமாக என்னை
வாழ்த்திப் பாடினார்கள், இன்றும் மூலைக்கு மூலை அதிக ஆர்வத்தோடு
புதிது புதிதாகப் புனைந்து பாடக் கிளம்பிவிட்டார்கள்
. இருந்து போகட்டும்.
எல்லாம் எனக்காக ஆர்வத்தினால் எழுதிப் பாடுகிறார்கள் என்றால்,
இப்பொழுது அதைப் பாடுவதற்காக பணமும் கேட்க ஆரம்பித்துவிட்டானே
மானிடன்
!' என்று மனதிற்குள்ளேயே அசைபோட்டவாறு இருந்தாள் கலைவாணி.
"கலைதேவியே!... என்ன யோசிக்கிறீர்கள்?" என்று சொல்லி கலைவாணியின்
மௌனத்தைக் கலைத்தார் நக்கீரர்
.
"ம்ம்ம்... அதுசரி, பிறகு அந்த நிகழ்ச்சியில் தமிழ்வாழ்த்துப் பாடியது யார்
நக்கீரரே
?"

நக்கீரர் நடந்ததை கலைவாணியிடம் கதையாகச் சொல்ல ஆரம்பித்தார்
...
             
***         ***         ***
ராஜன் பாடகரிடம், "இது இலவச நிகழ்ச்சி, தமிழுக்காகச் செய்யப்படும்
நிகழ்ச்சி
, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சி நெறியாளனான
நானும்கூட பணம் வாங்குவதில்லை
.  இந்த இரண்டு காரியத்தையும்
அடிப்படைத் தமிழறிவு உள்ள யார் வேண்டுமானாலும் செய்யலாம்
.
ஏன்
! அரைகுறைத் தமிழில் பேசி தமிழ்க்கொலை செய்யும் பலரும்கூட
வேறுசிலவகையான நிகழ்ச்சிகளுக்கு நடத்துனராக இருப்பதைப்
பார்த்ததில்லையா நீங்கள்
!  அவர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் பணத்தை
அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
.  வானொலி,
தொலைக்காட்சி ஊடகங்கள்வழி பிரபலமடைந்திருக்கின்ற ஒரே
காரணத்தால்தான் இந்த அவலங்கள் அரங்கேறுகின்றன
.  நான் உங்களை
குறை சொல்லவில்லை பாடகரே
, இது தமிழ்த்தாய் வாழ்த்து; நான்கு
வரிகளில் பாடினாலும் போதும்
" என்று விளக்கினார்.

பாடகர் மறுத்துவிட்டார்
.  'பணம் வைத்தால் பாட்டு' என்றார்.  கவலையோடு
அங்கிருந்து நகர்ந்த இராஜன்
, நடந்ததை ஏற்பாட்டாளர் மணியத்திடம்
சொல்ல
, அவரே பாடகர் மோகனிடம் சென்று சொல்லிப்பார்த்தார்.
அவர் மசியவில்லை
.  "தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் விழாவைத்
தொடங்குவோம்
" என்றார் மணியம்.

இராஜன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை
.  "தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல்
இலக்கிய நிகழ்ச்சியா
, யாரையாவது வைத்துப்பாட வைப்பேன்" என்றவரிடம்,
"நீங்களே பாடலாமே..." என்றார் மணியம்.

இராஜன் எதுவும் சொல்லாமல் வந்திருந்தவர்களில் பாடுபவர்கள் யாராவது
இருக்கிறார்களா எனத் தேடிக்கொண்டிருந்தார்
.  சிலரிடம் கேட்டும் பார்த்தார்.
எவருமே இசையவில்லை
தாமே பாடுவது என முடிவுசெய்துவிட்டு
மணியத்திடம் சென்று சொல்லியதைப் பாடகர் மோகன் பார்த்துவிட்டார்
.

இராஜனிடம் வந்து
, "சரி, பரவாயில்லை நானே பாடுகிறேன்" என்றார்!
'என்ன பாடல்' என்று இராஜன் கேட்க, "இறை வாழ்த்து பாடுகிறேன்"
என்றார் மோகன்
.
"எனக்கு வேண்டியது தமிழ்த்தாய் வாழ்த்து" என்று சொன்ன இராஜனிடம்,
"அப்படியானால் பாடலை எழுதித் தாருங்கள், நான் பாடுகிறேன்" என்றார் மோகன்.
"அடடே... தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒன்றுகூட உங்கள் கைவசம் இல்லை;
இந்த இலட்சணத்தில் பணம் தந்தால்தான் பாடுவேன் என்ற கண்டிஷன் வேறு
!
நல்லா இருக்கு பாடகரே
! அப்படி ஒன்றும் தேவையில்லை;  முன்பே
கேட்ட மாத்திரத்தில்
, 'சரி பாடுகிறேன்' என்று சொல்லியிருந்தாலாவது
ஏதாவது நல்லதொரு பாடலை எழுதிக் கொடுத்திருப்பேன்
!  பரவாயில்லை,
நானே பாடுகிறேன்
" என்று சொல்லிவிட்டார் இராஜன்.

நேரமும் சென்றுகொண்டிருந்தது
. கூட்டத்திற்குத் தலைமை ஏற்பவரும்
வந்துவிட்டார்
.  பிறகு இராஜனே நிகழ்ச்சி நெறியாளராக செயல்பட்டு
தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடி முடித்தார்
.  அவருடைய பாடலில் இசை
நயம் சற்றுத் தோய்ந்திருந்தாலும் செவி கேட்டின்புறும் அளவுக்கு நன்றாகவே
பாடி முடித்தார்
கூட்டம் சிறப்பாக முடிந்தது.
              
***         ***         ***
க்கீரர் நடந்த எல்லாவற்றையும் சொல்லிப் பேச்சை நிறுத்தியபோது
கலைவாணி தொடர்ந்தாள்
.
"இதில் என்ன பிரச்சனை நக்கீரரே? பணம் வாங்காமலேயே ஒருவர்
பாடிவிட்டாரே
!" என்றாள்.
"பிரச்சனை இருக்கிறது தேவி, சில வாரங்களுக்குப் பிறகு தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாட பணம் கேட்ட பாடகர்
, ஒரு எழுத்தாளரைப் பிடித்து,
அந்திப்பொழுதில் இருவரும் மது அருந்தி மதிமயங்கிய நேரத்தில்
, தாம்
பாடுவதற்குப் பணம் கேட்டதை மறைத்து
, "தமிழ்வாழ்த்துப்பாட
பாடகர் பஞ்ச
?" என்ற தலைப்பிட்டு எவருமே இல்லாதபோது பாடிய
இராஜனைக் கண்டித்து ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதவைத்தாராம்
!
தமிழ்வாழ்த்துப் பாடிய இராஜனும்
, ஏற்பாட்டாளர் மணியமும் கட்டுரையைப்
படித்துப் பார்த்து நொந்துப்போய் இனி தமிழ் நிகழ்ச்சியே நடத்தக்கூடாது
என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்
!   இப்படியே போனால் உண்மையில்
தமிழை நேசிப்பவர்கள் இருக்கமாட்டார்கள் தேவி
!" என்று தன் குமுறலை
வெளிப்படுத்தினார் நக்கீரர்
.
"தலைமைக் கவிஞரே!  தாங்கள் எதையும் மனதில் வைத்துக் கவலை
கொள்ளவேண்டாம்
.  நீங்கள் சொன்ன எல்லாப் பிரச்சனைக்கும் நானே
முடிவு கட்டுகிறேன்
, வாருங்கள் என்னுடன்!.." என்றுசொன்ன கலைவாணி
தன் உருவத்தை மாற்றிக்கொண்டு பூலோகத்திற்குப் புறப்பட்டாள்
.
                   ***     முற்றும்         ***  

No comments:

Post a Comment