Wednesday 10 October 2012

"அங்கம் தங்கம்தானா...!"

"அங்கம் தங்கம்தானா...!"

"அன்பே... நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்..."
அவள் அவனிடம் கூறியவாறே தன் ஆடைகளைக் கலைய முற்பட்டாள்!

"உண்மையில் உங்களைத்தவிர இந்த உலகில் வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை..."
"அன்பே... நீங்கள் என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டுகிறீர்கள். பஞ்சு போன்ற உங்களின் மென்மையான, கனிவான, இனிப்பான பேசசு..." பேசிக்கொண்டே தனது முழுக்காற்சட்டையையும் உருவிப் போட்டாள்!

வாழைத்தண்டுபோன்ற தன் கால்களிலிருந்து காலுறைகளைக் கழற்றி தூக்குச் சப்பாத்தினுள் திணித்தவாறே..., "மன்னவா! நிச்சயமாகச் சொல்கிறேன்... என் துணையால் ஒருபோதும் நீங்கள் விசனப்படமாட்டீர்கள்."

"டார்லிங்... நான் உங்கள்மீது வெறித்தனமான காதல் கொண்டுள்ளேன்! என் காதல் பவித்ரமானது, பரிசுத்தமானது. என் அரவணைப்பால், நீங்களே திக்குமுக்காடிப்போவீர்கள்! இதைவிட உங்களுக்கு நான் இன்னும் என்ன தரவேண்டும்?..." அவள் தன் உள்ளாடையை இலகுவாக நீக்கித் தூக்கி தூர எறிந்தாள்!

"நினைவு கொள்ளுங்கள், நான் உங்களுக்கே சொந்தமானவள்... உங்களுக்கு மட்டும் சொந்தமானவள். என் தேகச்சூடு வெளிக்கொணரும் உஷ்ணமூச்சு உங்கள் ஒருவருக்கே... உயிரே, இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். நான் உங்கள் ஒருவருக்கே உரியவள்...! என்று ஈனஸ்வரத்தில் முணகியவாறே, "குட் நைட் டியர்..." என்று சொல்லி தொலைப்பேசித் தொடர்பை நிறுத்திக்கொண்டு படுக்கைக்குச் சென்றாள்.

2 comments: