Wednesday 10 October 2012

யாருக்கு யாரைப் புரிகிறது?

யாருக்கு யாரைப் புரிகிறது?

சொல்வதெல்லாம் சரியென்றால் இனிக்கிறது
சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாய் நடக்கிறது
பொய் என்று தெரிந்தாலும் சகிக்கிறது
பேச்சுக்குத் தலையாட்டித் தொலைக்கிறது

பெற்ற பிள்ளைக்குத்தான் புரியவில்லை
பெற்றவளும் உற்றவனை அறியவில்லை
கற்ற அனுபவங்கள் வந்து நிற்கிறது
கொண்ட அக்கறையால் எடுத்துரைக்கிறது

உற்ற அறிவை உணர்ச்சி வெல்கிறது
உற்றவர் பெற்றவர் பாசம் மறைகிறது
கற்றுக் குட்டியாய் பாசத்தை மிதிக்கிறது
கொண்ட பாசம் தந்தையை வருத்துகிறது

யாருக்கு யாரைப் புரிகிறது?
புரிந்தும் என்ன ஆகப் போகிறது?
பேருக்குப் பேச்செல்லாம் இருக்கிறது
போனால் போகட்டும் என்றாகிறது!

என்ன சொல்லி என்ன பயன் ஆகப்போகிறது?
இந்தத் தலைமுறைக்குச் சொல்லியா விளங்கப் போகிறது?
மண்ணில் வாழ ஒழுங்குமுறை இருக்கிறது
மனம்போல் வாழ்வதென்றால் இனிக்கிறது!

1 comment:

  1. சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்

    ReplyDelete